
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதன்படி லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான தரல் மழை பெய்தது. அதோடு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்தது. மேலும் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.