தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.