100 மாணவர்களுக்கு மேல் பயிலும் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ஒரு ஆசிரியரை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் தற்போது 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் பாடப்பிரிவு வாரியாக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.