தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மட்டும் அரசு விடுமுறை நாட்களில் மக்கள் பலரும் வெளியூருக்கு செல்வதால் அரசு பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினம் விடுமுறை வர உள்ளதால் ஆகஸ்ட் 15ஆம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.