தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று ஜன,.15-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையில் போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் அரசு விடுமுறையாகும்.

இந்நிலையில் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக ஜனவரி 18 ஆம் தேதி புதன்கிழமை விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பொங்கலுக்கு பின் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை தருவது பற்றி அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.