தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் நிலையில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கேழ்வரகு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல் கட்டமாக தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது இரண்டு கிலோ கேழ்வரகு வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக ஈரோடு மற்றும் சேலத்தில் வழங்கப்படும் நிலையில் அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.