தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணத் தொகை வழங்க அரசு பரிசீலனை செய்துவருகிறது. இருப்பினும் இதில் நிறைய பேருக்கு வங்கிக் கணக்கு இல்லாததால் ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் 170 ஏடிஎம் மையங்கள் சரியாக இயங்கவில்லை என புகார் வந்ததால் ரொக்கமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பல ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்பதாலும் ரொக்கமாக தர முடிவு செய்யப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.