தமிழகத்தில் மாஞ்சா நூலுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளிட்டுள்ளது. நைலான், பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், மாஞ்சா நூல், காற்றாடி நூல்களின் உற்பத்தி, விற்பனை, கொள்முதல், இறக்குமதி மற்றும் பயன்படுத்தவும் தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.