சென்னை தலைமை செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவம் மாநாடு கையெட்டை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு ஜனவரி 19ஆம் தேதி முதல்  21 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசியவர் தமிழக மருத்துவத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் என 5000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளது .இந்த காலி பணியிடங்கள் அனைத்தும் எம்ஆர்பி தேர்வில் தேர்வானவர்களை அடிப்படையாகக் கொண்டு நிரப்பப்படும் எனவும் அடுத்த ஒரு மாதத்திற்குள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு தேர்வாளர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.