
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, பாஜக மீண்டும் வென்றால் அது மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படும். குறிப்பாக, உலகளவில் இந்தியா, 5ஆவது பெரிய பொருளாதார நாடு, டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதலிடம், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் வெற்றி வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளதாக பார்க்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் பிரதமர் மோடி அடிக்கடி பயணம் மேற்கொண்டார். அதன் பலனாக தமிழகத்தில் 2-4, கேரளாவில் 1-3 தொகுதிகளில் பாஜக வெல்லும் என கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. ஏற்கெனவே கர்நாடகா, ஆந்திராவில் பாஜக கூட்டணி சிறப்பான வெற்றி பெறும் எனக் கணித்துள்ள நிலையில், தென் தமிழகத்தில் பாஜகவின் கை ஓங்கி வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.