
தமிழகத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்படுத்த வேண்டும் என்பதில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. அதேசமயம் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் பள்ளி வேலை நாட்கள் எண்ணிக்கையை வழக்கம் போல 210 நாட்களாக குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
நடப்பு கல்வி ஆண்டில் 10 சனிக்கிழமைகள் உட்பட 220 நாட்கள் பள்ளி வேலை நாட்கள் ஆக செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை மாற்ற வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் 210 நாட்களாக குறைக்கப்பட உள்ளது. கடந்த சனிக்கிழமைகள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.