
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு இடங்களிலும் NIA அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் NIA அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னை, மதுரை, தேனி மற்றும் திருச்சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த நபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பல பகுதிகளிலும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.