தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி அதாவது நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டது.

மேலும் விடைத்தாள் நகல் பெற மற்றும் மறு கூட்டலுக்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.