தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறையில் அனைத்து ஊழியர்களின் சொத்து அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சார் பதிவாளர்,அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் துணை பதிவுத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இன்றே கடைசி நாள் ஆகும்.