தமிழகத்தில் நாளை முதல் பத்திரப்பதிவு சேவை கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. ஆவண பதிவு செய்தல், ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி,

ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200- ஆகவும்,

குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000-லிருந்து ரூ.10,000- ஆகவும்

அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25,000-லிருந்து ரூ.40,000- எனவும், தனி மனை பதிவிற்கான கட்டணம் ரூ.200-லிருந்து ரூ.1,000- ஆகவும்,

குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10,000/- என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.