வரும் மார்ச் 3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் குலந்திகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும். 57.84 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.