திருவண்ணாமலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு மகரஜோதி ஏற்றப்படும். இதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் முத்தரவிட்டுள்ளது. அதன்படி கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் நவம்பர் 25 முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் மகரஜோதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.