தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நல குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்று இருப்பதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் உறுப்புகளின் செயல்பாட்டை கூர்ந்து கண்காணிக்கவே அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.