தமிழகத்தில் விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு பிரீமியம் தொகையை கட்டுவதற்கு இன்று அதாவது நவம்பர் 22 கடைசி நாளாகும். இதற்கு முன்னதாக கடந்த நவம்பர் 15ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பிரீமியம் தொகையை கட்ட கால அவகாசத்தை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.