நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது காவல்துறை. நடிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தி இருந்த நிலையில், காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.