உளுந்தூர்பேட்டை அருகே கார் – தனியார் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் சென்ற லாரி திடீரென்று வேகத்தை குறைத்ததால் பின்னால் வந்த கார், பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்