
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் கடந்த வருடம் முதல் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தகுதியுள்ள 1.16 கோடி மகளிர்க்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்படும் நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சமீபத்தில் சில பயனாளிகள் இறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டதாக ஆர்டிஐ மூலம் தகவல் வெளிவந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு விரைவில் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அமைச்சர் அது தொடர்பாக குட் நியூஸ் சொல்லியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் தமோ அன்பரசன் அடுத்த 2 மாதங்களில் விடுபட்டுள்ள தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறினார். மேலும் ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் புதிதாக பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்பட நிலையில் புதிதாக ரேஷன் கார்டுகள் வாங்குவோரும் அந்த திட்டத்தில் தகுதி இருந்தால் சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்த 2 திட்டத்தில் விடுபட்ட மகளிரும் இணைக்கப்படுவார்கள் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.