தஞ்சாவூரில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 30 வரை திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177 வது ஆராதனை விழா நடைபெறுகிறது. இதற்கான பந்தல் நடும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் சித்தியடைந்த பகுல பஞ்சமி நாளாகிய ஜனவரி 30 ஆம் தேதி ஆராதனை விழா நடைபெற உள்ளதால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஜனவரி 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.