தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த காய்ச்சல் அதிகம் உள்ள இடங்களில் RTPCR பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 98% மக்களுக்கு 3 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் தமிழக மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் குறித்து கண்காணித்து வருகிறோம் என்றார்.