கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் நேற்று காலை அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் நேற்று நிகழ்ந்த குண்டு வெடிப்பு காரணமாக தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட SP களுக்கும் சட்ட ஒழுங்கு ADGP அருண் ஆணையிட்டுள்ளார். அதன்படி, சுற்றுலா தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.