தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவச மாணவர் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் விவரம் குறித்து தனியார் பள்ளிகள் தங்களது அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி வரும் கல்வியாண்டுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்கேஜி, 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு வருகின்ற ஏப்ரல் 22 முதல் மே 20ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி தகுதியான இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் விவரங்களை தனியார் பள்ளிகள் தங்களுடைய அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.