திருச்சியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்பு வெள்ளையர்களை எதிர்த்து போராடினோம். இன்று கொள்ளையர்களை எதிர்த்து போராடுகிறோம். கப்பல் துறை, போக்குவரத்து துறை, கல்வித்துறை, மருத்துவத் துறை, விமானத்துறை மற்றும் ரயில்வே துறைகளை தனியாருக்கு மாற்ற அவசியம் என்ன? இந்தியாவில் அம்பானியும் பாமரனும் ஒரே மாதிரியான வரி தான் செலுத்துகிறார்கள். ஆனால் இருவரின் வாழ்க்கைத் தரம் மட்டும் வேறுபட்டுள்ளது. விலைவாசி உயர்வால் தான் நம்முடைய வாழ்க்கை தரம் மாறிவிட்டது என சீமான் தெரிவித்துள்ளார்.