தமிழகத்தில் இன்று பிப்ரவரி 1 முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தரராக மதுபானங்களின் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட உயர்ரக மதுபானங்கள் விலை 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளது.

அதனைப் போலவே 375 மில்லி லிட்டர், 750 மற்றும் ஆயிரம் மில்லி லிட்டர் கொள்ளளவு உள்ள மதுபான ரகங்களும், 325 மற்றும் 500 மில்லி லிட்டர் கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளுக்கும் ரகத்திற்கு ஏற்றது போல விலை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது