தமிழகத்தில் மூன்று மாடிகளை உடைய சிறு அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது சேவை மின்கட்டணத்தை இன்று முதல் யூனிட்டுக்கு 5.50 ரூபாயாக நிர்ணயித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவாகவும் மூன்று மாடிகள் அல்லது அதற்கும் குறைவாகவும் உள்ள லிப்ட் வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொது சேவை மின் கட்டணம் யூனிட்டுக்கு எட்டு ரூபாயிலிருந்து 5.50 மயில் அறிவித்த நிலையில் இந்த கட்டண குறைப்பை ஒழுங்குமுறை ஆணையம் இன்று முதல் அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஒன் இ என்ற புதிய கட்டண விகிதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.