தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பலரும் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் அவர்களின் வசதிக்காக பாரத் கௌரவ்  சுற்றுலா ரயில் செப்டம்பர் 28 இன்று மதுரை மற்றும் மும்பை இடையே இயக்கப்படுகின்றது. இந்த ரயில் இன்று மாலை 4 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் எனவும் அக்டோபர் நான்காம் தேதி காலை 8.30 மும்பை வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மறு மார்க்கமாக அக்டோபர் நான்காம் தேதி இரவு 7 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் ரயில் இரவு 9.30 மணிக்கு மதுரை  வந்தடையும்  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இந்த ரயிலில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் ,8 ஸ்லீப்பர் பெட்டிகள், ஒரு பேட்டரி கார், 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளதாகவும் இந்த ரயில் உஜ்ஜைன், மஹாகாலேஷ்வர், ஓம்காரேஸ்வர், ஹரிதுவார், ரிஷிகேஷ், காசி, சாரநாத், அயோத்தியா, ப்ரயாக்ராஜ்  ஆகிய இடங்களுக்கு செல்ல உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.