கடலூர்: சிதம்பரம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிதம்பரம் நகர பகுதிகள், அம்மாபேட்டை, வண்டிகேட், சி.முட்லூர் கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலூர், வல்லம்படுகை, தில்லை நாயகபுரம், கீழமூங்கிலடி பின்னத்தூர், கிள்ளை, பிச்சாவரம், கனகரபட்டு, நடராஜபுரம், கவரப்பட்டு, கே.டி.பாளை, சிவபுரி மாரியப்பாநகர், அண்ணாமலைநகர், பெராம்பட்டு, கீரப்பாளையம்,எண்ணாநகரம், கன்னங்குடி,வயலூர், சிலுவைபுரம்,மேலமூங்கிலடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திண்டுக்கல்: நத்தம் அடுத்துள்ள எல்.வலையபட்டி உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ந.புதுக்கோட்டை, ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, மற்றும் பெருமாள்பட்டி ஆகிய ஊர்களில் மின்சாரம் இருக்காது. அதே போல், ஒட்டன்சத்திரம், புது அத்திக்கோம்பை, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூர்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பிள்ளைபட்டி, காப்பிளியபட்டி, அம்பிளிக்கை, வடகாடு மலைக்கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், ரெட்டியபட்டி, வத்திப்பட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் மின்தடை ஏற்படும்.

கன்னியாகுமரி: கண்ணநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று ( சனிக்கிழமை ) நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கண்ணநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கும், காற்றாலைகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.