தமிழகம் முழுவதும் இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சென்னை நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெறவுள்ள விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனக்கு வழங்க பெற்ற 7740 புத்தகங்களை தமிழக அரசின் பொது நூலகத்திற்கு வழங்குகிறார். மு க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகள் மற்றும் பொன்னாடைகளை தவிர்த்து அதற்கு பதிலாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி தன்னை சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சம் அறிவார்ந்த புத்தகங்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரி கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் அவர் வழங்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை நங்கநல்லூர் பள்ளிக்கு வழங்க இருக்கிறார்.