டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கினால் பில் கொடுக்கும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ரெயில்டெல் என்ற நிறுவனத்திற்கு ரூ. 294 கோடி மதிப்பிலான ஆர்டரை டாஸ்மாக் நிறுவனம் வழங்கியுள்ளது.இதனால், தமிழகம் முழுவதும் 5,000 டாஸ்மாக் கடைகள் கணினிமயம் ஆக்கப்படவுள்ளது.

இதன் மூலமாக மதுபானங்கள் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் கணினிமயமாகும்  மதுவிற்கு பில் கொடுப்பதால் அதிக விலைக்கு விற்கப்படுவது தவிர்க்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக அதிக விலைக்கு மது விற்கக்கூடாது என மதுவிலக்குத்துறை அமைச்சர் எச்சரித்திருந்தார்