மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்  தமிழகத்தில் வரும் ஜூன் 29ம் தேதி பக்ரீத் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி,அன்று அரசு விடுமுறை தினமாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை ஒட்டி சென்னை சென்ட்ரல் – நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் 28ம் தேதி இரவு 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரல்-நெல்லைக்கும், 29ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நெல்லை-சென்னை சென்ட்ரலுக்கும் இயக்கப்பட உள்ளது.