தமிழகத்தில் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. தமிழக அரசு சார்பாக பத்திரப்பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கான கட்டணத்திலும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக சேரும் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு தற்போது வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக சேர்ப்பவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் பட்டியல் இனத்தவர்களுக்கு பதிவு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.