இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டுமெனவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதியை கண்டித்தும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் நேற்று பாஜகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர். முற்றுகை பேரணி நடத்திய பாஜகவினர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சட்டவிரோதமாக கூடுதல், முறையற்று தடுத்தல், பொதுத் தொல்லை தருதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.