தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டிருக்கும் எண்ணூர் மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி பரிந்துரைத்துள்ளது.

சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக எண்ணூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி பாதிக்கப்பட்டிருக்கும் 5 ஆயிரத்து 852 குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியோடு சேர்த்து கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசிடம் மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.