தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பொது தேர்வு நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்நிலையில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும். அக்கம் பக்கத்தினர் உடன் தேவையில்லாமல் பேசக்கூடாது. சரியான நேரத்திற்கு வர வேண்டும். அடிக்கடி வெளியே செல்ல கூடாது என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.