தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் தரத்தையும் உயர்த்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் இந்த வருடம் தனியார் பள்ளிகளை போல ஏப்ரல் மாதத்தில் இருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இந்த வருடம் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளியில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர்.

இந்நிலையில் அரசு பள்ளி உதவியாளர்களின் பணி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி உதவியாளர் மற்றும் இளநிலை பள்ளி உதவியாளர்களின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை இருந்தது. தற்போது அரசு பள்ளி உதவியாளர் மற்றும் இளநிலை உதவி பணியாளர்களின் வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி நேரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.