
தமிழ்நாட்டில் வீடுதோறும் குடிநீர் வசதி ஏற்படுத்த உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ்,தமிழகத்தில் 11,866 குடியிருப்புகளில் வசிக்கும், 1.03 கோடி மக்களுக்கு, தினமும் 68.27 கோடி லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது அனைத்து வீடுகளுக்கு குழாய் இணைப்புகளின் வாயிலாக, தினசரி ஒரு நபருக்கு, 55 லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது என்றும் இதற்காக 1,658.31 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், தற்போது 4.53 கோடி மக்கள் பயன் பெறும் வகையில், 195 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.