ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கத்தின் அனைத்து மாவட்ட திட்ட அலுவலர்களுக்கும் சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல புதுமையான திட்டங்கள் வகுக்கப்பட்ட வரும் நிலையில் இந்த திட்டங்கள் அனைத்தும் மாவட்ட திட்ட அலுவலகங்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலகங்கள் மூலமாக பள்ளிகளில் அமல்படுத்தப்படுகிறது.

இதற்கு தேவையான நிதி மற்றும் வழிகாட்ட நெறிமுறைகள் அனைத்தும் மாநில திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் உட்கூறுகள் மற்றும் செயல்பாடுகள் சார்ந்து மாவட்ட திட்ட அலுவலர்களுக்கு ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் புத்தாக்க பயிற்சி சென்னையில் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.