தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. ஒரு பக்கம் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நிலையில் ஆங்காங்கே மழை பெய்து வருவது மக்களை சற்று குளிரூட்டும் விதமாக உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, விழுப்புரம், கடலூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.