தென் கிழக்கு ஆசியாவில் பெரிய உயிரியல் பூங்காவாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இருந்து வருகிறது. வருடந்தோறும் இந்த பூங்காவுக்கு 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். இந்த வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூபாய்.90 கட்டணமாகவும், சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை ஏப்ரல் 4-ஆம் தேதி செயல்படும் என்று பூங்கா நிர்வாகமானது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை விடப்படும். மகாவீர் ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு நாளை பூங்கா செயல்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.