நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை சுட்டிகாட்டி பிரேமலதா, விஜயகாந்த்தை பாலோ செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார். இதற்கு காரணம் விஜய், விஜயகாந்த் குடும்பத்திற்கு எந்த ஒரு உதவியும் செய்யாதது என்று கூடவே சொல்லலாம். ஏனெனில் ஆரம்ப காலகட்டத்தில் விஜய் அப்பா எஸ்ஏ சந்திரசேகருக்கு நிறைய படங்களை கொடுத்தவர் விஜயகாந்த் தான். அதோட மட்டுமல்லாமல் தன்னுடைய மகனுக்கும் உங்களுடைய படத்தின் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று எஸ்ஏசி கேட்டுக் கொண்டாராம். அதன்படி தன்னுடைய படத்தி நடிக்க வைத்து விஜய் பெரிய ஆளாக்கிவிட்டது விஜயகாந்த் தானாம்.

இப்போது விஜய் சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும் நிலையில் விஜயகாந்த் குடும்பத்திற்கு உதவி செய்யலாம். அதாவது விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்க போராடி வருகிறாராம். அவரை சினிமாவில் பெரிய ஆளாக்குவதற்கு விஜய் ஏதாவது உதவி செய்திருக்கலாம். தன்னை வளர்த்து விட்டவருடைய மகனைக் காப்பாற்ற தளபதிக்கு ஏதோ மனம் இல்லாமல் இருந்து வருகிறார். இன்று வரை அந்த நன்றி கடனை செய்யாமல் விஜய் இருப்பதால் தான் அவரை கர்மா சுத்தி சுத்தி அடிப்பதாக சிலர் கூறி வருகிறார்கள்.