சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்திற்குத் தினமும் சுமார் 17 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் வாகன அணிவகுப்பால், வழிநெடுகிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

மக்களின் இந்த நியாயமான கோரிக்கையையும் தவிப்பையும் உடனடியாகக் கவனித்த முதல்வர் விஜய், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

முதலமைச்சரின் நேரடி வழிகாட்டுதலின்படி, அவரது வாகன அணிவகுப்பு செல்வதற்கென இப்போது தனியாகப் பிரத்யேகப் பாதை (CM Route) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து சீராக நடைபெறவும், பொதுமக்கள் தங்குதடையின்றித் தங்களது பயணத்தைத் தொடரவும் ஏதுவாகச் சிறப்பு மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

அதிகாரத்திற்கு முக்கியத்துவம் தராமல், மக்களின் அன்றாடச் சிரமத்தைப் போக்கத் தனி வழி அமைத்துக் கொண்ட முதல்வரின் இந்தச் செயல், அரசியல் வட்டாரத்தில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

“>