மோகன் ராஜா டைரக்டில் ஜெயம்ரவி நடிப்பில் சென்ற 2015-ம் வருடம் வெளியாகிய படம் “தனி ஒருவன்”. இந்த படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகிய இப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் 2ஆம் பாகம் பற்றி ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் அவ்வப்போது கேட்டு வருகின்றனர்.

அண்மையில் ஜெயம்ரவி தனி ஒருவன் படத்தின் 2ம் பாகத்திற்கான கதை தயாராகிவிட்டதாகவும், பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்னரே தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டதாகவும் தெரிவித்தார். எனினும் தானும், சகோதரர் ராஜாவும் அவரவர் பணியில் கவனம் செலுத்தி வருவதால் பணிகள் முடிந்த பிறகு இருவரும் தனிஒருவன் படத்தில் இணைவோம் என கூறி இருந்தார். இந்த நிலையில் ஜெயம்ரவி தனி ஒருவன் 2ஆம் பாகத்தின் அப்டேட் கொடுத்து உள்ளார். அதன்படி, ரசிகர் ஒருவர் தனி ஒருவன் திரைப்படத்தின் 2-ம் பாகத்தின் சூட்டிங் எப்போது துவங்கும் என கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெயம்ரவி 2024ம் வருடம் தொடங்கப்படும் என பதிலளித்துள்ளார். இப்பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.