தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் எதிர்காலத்தில் பயன் பெறும் வகையில் ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம், தேசிய ஓய்வூதிய அமைப்பு மற்றும் அடல் பென்ஷன் யோஜனா ஆகிய பென்ஷன் திட்டங்களை மத்திய அரசு தனியார் ஊழியர்களுக்காக செயல்படுத்தி வருகிறது.

இதில் தேசிய ஓய்வூதிய திட்டம் நல்ல வட்டியை வழங்குகிறது. நீண்ட காலம் சேமிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து லாபகரமான பலனை பெற முடியும். அடுத்ததாக குறைந்த வருமானம் உள்ளவர்கள் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர்ந்து 60 வயதிற்கு மேல் உள்ள ஓய்வூதியத்தை பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை ஓய்வூதியத்தை பெற முடியும்.