திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமியை பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் ஆதார் கார்டை மருத்துவர்கள் பார்த்தபோது அவருக்கு 17 வயது தான் ஆகிறது என்பது தெரியவந்தது.

இதனால் மருத்துவர்கள் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவை எரும்பி பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் திருமணம் செய்துள்ளார்.

அவர் கூலி வேலை பார்த்து வருகிறார். 17 வயது சிறுமி தனது அக்கா வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பெருமாள் தனது மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பெருமாளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.