செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்துறை சேர்ந்த துலுக்கானோம் மற்றும் சம்பூர்ணம் தம்பதியின் மகள் ஜெயந்தியை அவரின் கணவர் டார்ஜன் கொடுமைப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி இதனை தட்டி கேட்ட மாமனார் மாமியாரை அந்த நபர் தாக்கியதில் ஜெயந்தியின் தந்தை துடித்து துடித்து உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட டார்ஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்துள்ளார்.

இதனை அறிந்த துலுக்கானோமின் மகன் சூர்யா மற்றும் லோகேஷ் ஆகியோர் பழிவாங்கும் விதமாக நேற்று இரவு வீடு புகுந்து டார்ஜனை  தலையைத் துண்டித்து கொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.