தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில், ஒரு பாடகியாக அறியப்பட்டு. பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தவர் ஆண்ட்ரியா. இவர், சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய சிறு வயதில் பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான விஷயம் குறித்து தெரிவித்துள்ளார். “அப்போது எனக்கு 11 வயது இருக்கும்.

நான் என் பெற்றோருடன் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். ஜீன்ஸ் மட்டும் டீ ஷர்ட் அணிந்திருந்தேன். அப்பா என் அருகில் அமர்ந்திருந்தார். அப்போது ஒருவன் எனது டீஷர்ட்க்குள் கையை விட்டான். அப்போது அது எதற்கு என புரியவில்லை. அழுகைதான் வந்தது. பயத்தால் நான் யாரிடமும் சொல்லாமல் மறுத்துவிட்டேன் என கூறியுள்ளார்.